எல்லா நிகழ்வுகளுக்கும்
ஒரே மாதிரியான
முகபாவங்கள் காட்டுவதை
இப்போதே நிறுத்திவிடுங்கள் .
பழிதீர்க்கப் பட்டவனின்
சாவுக்கு செல்கையிலும்
ஒரு துளி ஊமை கண்ணீருக்காய்
பிராத்தியுங்கள் .
இறந்தவன் உற்ற நண்பனெனில்
பலூனுடைந்த கணத்தில்
அழும் சிறுமியைப்போல
வெடித்தழுது கூச்சலிடுங்கள் .
தூரத்து உறவினரின் திருமணத்திற்கு
ஒரு மலரைப்போல மென்புன்னகை
நெருங்கிய சொந்தமெனில்
காற்றிலாடும் நாணலாய் மகிழ்ச்சி முகம் .
ஒரு உயிரின் பிறப்பை
புருவமுயர்த்தி வரவேற்கலாம்
ஒரு துரோகத்தின் நாளை
தூக்க முகத்தோடு கழிக்கலாம்
ஒரு வெற்றியின்போது
அமைதியை தழுவ விடுங்கள்
ஒரு தோல்வியை
நம்பிக்கை கண்களோடு எதிர்கொள்ளுங்கள்
இவையெல்லாம் தாண்டி
நீங்களும்
ஒரு காதல் முறிவை சந்திக்க நேர்ந்தால் .
அழுது புரண்டுகொண்டிருக்காமல்
ஜன்னல் கம்பியிலிருக்கும் ஒரு சிட்டுக்குருவியையோ
நின்று போய் கிடக்கும் பழைய கடிகாரத்தையோ பார்த்தபடி
யாருக்கும் முகம் கொடுக்காமல்
கடந்துவிடுங்கள் .
Friday, December 31, 2010
Wednesday, December 29, 2010
நனையத்தான் விரும்புகிறேன் இப்போதைக்கு !
வெட்டாந்தரையிலோடும்
கரும்புள்ளி வண்டிற்க்கொப்பான
மனநிலையில்
நான்.
மிக எளிதாய் கடந்துவந்ததாய்
நினைத்துக்கொண்டிருக்கும் வெறுமையின்
நாட்களை
இந்த சிற்றெரும்பை பார்க்கையில்
நினைத்துக்கொள்கிறேன் .
துர்கனவுகளுக்கு பயந்து
தூங்காமல் கிடந்த ராத்திரிகளின் வாசனை
இங்குதான் ஏதேனும் ஒரு
மரத்தினடியில்
ஒளித்து வைக்கப்பட்டிருக்கலாம் .
மனம் தெளிந்த இக்கணத்தில் ...
பெயர்தெரியாத ஒரு செடி
துளிர்க்க ஆரம்பிக்கிறது .
தகித்து கொண்டிருந்த வெயிலை
சுகித்துப் பார்க்கிறது மழைக்கு முந்திய தென்றல் .
மஞ்சள் நிறத்தில் கடலைக்காடுகள்
பூத்த வண்ணம் இருக்கின்றன .
ஒரு சிகப்பு நிற பட்டுப்பூச்சி
என் பாதைக்கு குறுக்காய் செல்கிறது .
மழைக்கு அடிபோடுகிறது வானம்
நானும்
நனையத்தான் விரும்புகிறேன் இப்போதைக்கு !
கரும்புள்ளி வண்டிற்க்கொப்பான
மனநிலையில்
நான்.
மிக எளிதாய் கடந்துவந்ததாய்
நினைத்துக்கொண்டிருக்கும் வெறுமையின்
நாட்களை
இந்த சிற்றெரும்பை பார்க்கையில்
நினைத்துக்கொள்கிறேன் .
துர்கனவுகளுக்கு பயந்து
தூங்காமல் கிடந்த ராத்திரிகளின் வாசனை
இங்குதான் ஏதேனும் ஒரு
மரத்தினடியில்
ஒளித்து வைக்கப்பட்டிருக்கலாம் .
மனம் தெளிந்த இக்கணத்தில் ...
பெயர்தெரியாத ஒரு செடி
துளிர்க்க ஆரம்பிக்கிறது .
தகித்து கொண்டிருந்த வெயிலை
சுகித்துப் பார்க்கிறது மழைக்கு முந்திய தென்றல் .
மஞ்சள் நிறத்தில் கடலைக்காடுகள்
பூத்த வண்ணம் இருக்கின்றன .
ஒரு சிகப்பு நிற பட்டுப்பூச்சி
என் பாதைக்கு குறுக்காய் செல்கிறது .
மழைக்கு அடிபோடுகிறது வானம்
நானும்
நனையத்தான் விரும்புகிறேன் இப்போதைக்கு !
Subscribe to:
Posts (Atom)