Wednesday, January 5, 2011

நாடகம் !

எச்சிலூற நா தொங்கவிட்டு
சிங்கநடை நடப்பது போல
பாவலாக்காட்டி
ஓடியும் ,

நின்று
சதிசெய்து பின்
மெல்ல பூனை நடை
நடந்தும் ,

திட்டமிட்ட
ஒரு நரியைப்போல
மாறுவேடமிட்டு
பதுங்கியும் ,

எல்லாம் விடுத்து நாயாகவே ஆனபின்பும் ,

அணிலை கோட்டைவிட்டது
கடைசிவரையில்
அணிலாக நடிக்கத் தெரியாத நாய் !

11 comments:

பா.ராஜாராம் said...

ரொம்ப நல்லாருக்கு ஜெனோ!

ராகவன் said...

ஏய் ஜெனொ,

எப்படி இருக்க? ரொம்ப நாளாச்சுலே உன்னப் பாத்து...

பெங்களூரு எப்படி இருக்கு... ஒரு தகவல் இல்லை உன்னப்பத்தி...

கவிதையும்... நல்லாயிருக்கு...

அன்புடன்
ராகவன்

"உழவன்" "Uzhavan" said...

சூப்பர் :-)

Ganesan said...

அருமை ஜெனோ..

ப்ரியமுடன் பாலா said...
This comment has been removed by the author.
ப்ரியமுடன் பாலா said...

அருமை... ஆனா,இதுல IT பத்தி ஏதும் உள்குத்து இல்லையே..!!!???
:P

rvelkannan said...

அருமை ஜெனோ..

rvelkannan said...

நண்பர் பாலா ...
வெளிப்படையாக தெரியவில்லை என்றாலும்
இரண்டு மூன்று முறை படித்து பாருங்கள் தெரியும்
இது IT Dept. க்கு மட்டும் அல்ல என்பது எனது புரிதல்

இரசிகை said...

yellaathaiyum vaasithen...

vaazhthukal jenova sir:)

திண்டுக்கல் தனபாலன் said...

உங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்...

மேலும் விவரங்களுக்கு இங்கே (http://blogintamil.blogspot.in/2013/03/blog-post_28.html) சென்று பார்க்கவும்... நன்றி...

Anonymous said...

வணக்கம்
இன்று உங்களின் வலைப்பூ வலைச்சரத்தில் அறிமுகமாகியுள்ளது வாழ்த்துக்கள்
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-