தீர்ந்த மழையில்
உடல் விறைத்து நிற்கும்
குல்முகர் பூக்களின் மரத்தினடியில்
ஒரு கோடைகாலத்தின்
வெம்மையோடு
தனிமைப்படுத்தப்பட்டிருக்கிறேன் .
தனிமைகள்
பெரும்பாலும் உஷ்ணமாயிருக்கின்றன
மரங்கள் அடர்ந்த இந்த பூங்காவிலும்
வெறுமை
ஒரு வெடித்த இலவத்தை போல
அலைந்து திரிகிறது .
காற்றில் மிதந்து வரும்
தனிமையின் இசை
ஒரு பஞ்சு மேகத்தைப்போல
எனைத் தொட்டு தடவி
பின்
வழிந்து வேறோரிடம் செல்கிறது .
அலுப்பு மேலோங்க
கண் இமைகளை
மெல்ல மூடிக்கொள்கிறேன்
இமைகளின் இருட்டுக் கண்ணாடியையும்
உடைத்து எட்டிப்
பார்க்கிறது தனிமை .
கடைசியில்
காற்றோடு கதைபேசிக்கொண்டே வந்த
குல்முகர் பூவொன்று
கலைத்துச் சென்றதென் வெறுமையை
எதற்கும் இருக்கட்டுமென்று எடுத்து
வைத்துக்கொள்கிறேன் என் குல்முகரை !
Friday, May 7, 2010
Wednesday, May 5, 2010
எதிரெதிர் !
வரம் வாங்கி
மீள்கையில்
சாபம் கொண்டு வரும்
ஒருவரையாவது
எதிரெதிரில்
சந்திக்க வேண்டியுள்ளது .
வாங்கி வந்த வரம்
சாபமென்றாக
வந்த இடத்திலேயே
சேர்த்துவிடலாமென்று
திரும்பிச் செல்கையில்
வரம் வாங்கி எதிர்வரும் ஒரு
புண்ணியாளன்
ஏளனப்பார்வை பார்த்துச் செல்கிறார்
ஒப்புக்கு சிரித்து வைப்பதை
தவிரவும்
எனக்கு வேறு வழியில்லை !
மீள்கையில்
சாபம் கொண்டு வரும்
ஒருவரையாவது
எதிரெதிரில்
சந்திக்க வேண்டியுள்ளது .
வாங்கி வந்த வரம்
சாபமென்றாக
வந்த இடத்திலேயே
சேர்த்துவிடலாமென்று
திரும்பிச் செல்கையில்
வரம் வாங்கி எதிர்வரும் ஒரு
புண்ணியாளன்
ஏளனப்பார்வை பார்த்துச் செல்கிறார்
ஒப்புக்கு சிரித்து வைப்பதை
தவிரவும்
எனக்கு வேறு வழியில்லை !
Sunday, May 2, 2010
அடிமைகளின் முகங்கள்!
பரபரப்பாய் இயங்கும் நகரவீதியின்
ஏதாவது ஒரு சந்தில்
ஒரு கும்பல் எப்பொழுதும்
பஞ்சாயத்து செய்து
பிழைக்கிறது
செய்யாதவற்றையெல்லாம்
செய்ததாக ஒப்புக்கொண்டு
அடிவாங்கும்
ஒர் அப்பாவியும் எப்படியாவது
கண்ணில் படுகிறான்
இணையுடன்
குறைந்தபட்ச வாக்குவாதங்களில்லாமல்
பொருட்கள் வாங்கும் சூத்திரம்
மறந்துபோய் மறைவாக
புகைத்துக்கொண்டிருக்கிறான் கணவனொருவன்
உணர்வுகள் எளிதில்
தெரியாவண்ணம்
எல்லாருக்கும் ஒவ்வொரு
நிழல் முகம் தேவையாயிருக்கிறது
சில சமயங்களில் நிழலும் கூட
முகம் சிதைந்து
முண்டங்கள் மட்டுமே நிற்கின்றன.
ஏதாவது ஒரு சந்தில்
ஒரு கும்பல் எப்பொழுதும்
பஞ்சாயத்து செய்து
பிழைக்கிறது
செய்யாதவற்றையெல்லாம்
செய்ததாக ஒப்புக்கொண்டு
அடிவாங்கும்
ஒர் அப்பாவியும் எப்படியாவது
கண்ணில் படுகிறான்
இணையுடன்
குறைந்தபட்ச வாக்குவாதங்களில்லாமல்
பொருட்கள் வாங்கும் சூத்திரம்
மறந்துபோய் மறைவாக
புகைத்துக்கொண்டிருக்கிறான் கணவனொருவன்
உணர்வுகள் எளிதில்
தெரியாவண்ணம்
எல்லாருக்கும் ஒவ்வொரு
நிழல் முகம் தேவையாயிருக்கிறது
சில சமயங்களில் நிழலும் கூட
முகம் சிதைந்து
முண்டங்கள் மட்டுமே நிற்கின்றன.
Monday, April 26, 2010
நாலே நாலு நாள் !
"நாலு நாள் கழிச்சி வந்து வாங்கிக்கப்பா " என்று
பால்காரனிடம் சொல்லும்
அதே பதில்
கொஞ்சம் தொனி மாறி
"நாலாந் தேதிக்கப்புறம் தந்துடுறேன் "
என்றாகிப்போகும் வட்டிக்காரனிடம் .
நாலாம் தேதியும்
மாமா பூ வாங்கிவரவில்லையெனில்
ரெண்டு தெரு தாண்டிச்சென்று
கோமதி அக்காவிடம் அதே
"நாலு நாள் மந்திரத்தை"
சொல்லவேண்டியிருக்கும் .
நாலு நாலு நாட்களாகவே
தொடரும் அக்காவின் மாதம்
மாதக்கடைசி வரும்போது
ஏழாவது முறையாக
மீண்டும் ஆரம்பிக்கும்
வெவ்வேறு தொனிகளுடன் !
பால்காரனிடம் சொல்லும்
அதே பதில்
கொஞ்சம் தொனி மாறி
"நாலாந் தேதிக்கப்புறம் தந்துடுறேன் "
என்றாகிப்போகும் வட்டிக்காரனிடம் .
நாலாம் தேதியும்
மாமா பூ வாங்கிவரவில்லையெனில்
ரெண்டு தெரு தாண்டிச்சென்று
கோமதி அக்காவிடம் அதே
"நாலு நாள் மந்திரத்தை"
சொல்லவேண்டியிருக்கும் .
நாலு நாலு நாட்களாகவே
தொடரும் அக்காவின் மாதம்
மாதக்கடைசி வரும்போது
ஏழாவது முறையாக
மீண்டும் ஆரம்பிக்கும்
வெவ்வேறு தொனிகளுடன் !
Friday, April 23, 2010
ஒளி மூடிய உன் இரவு !
அணிந்திருந்த
முத்துக்களைஎல்லாம் விசிறிஎறிந்து
மூளியாய் நிற்கிறாய்
போர்த்தியிருந்த
மேலாடையையாவது வைத்திருக்கலாம்
அதையும் அவிழ்த்தெறிந்து
அரை நிர்வாண அழகியாய்
சலனப் படுத்துகிறாய்
ஆரவாரம் கொள்ளக் காத்திருக்கும் தெரு
படுத்திருக்கும் மடக்குக் கட்டில்
பல்லிளிக்கும் நட்சத்திர முத்துக்கள்
அரை நிர்வாண நிலையில் நீ
ஒளி மூடிய உன் இரவு
வேறென்ன வேண்டும் நான்
மோகம் கொள்ள !
முத்துக்களைஎல்லாம் விசிறிஎறிந்து
மூளியாய் நிற்கிறாய்
போர்த்தியிருந்த
மேலாடையையாவது வைத்திருக்கலாம்
அதையும் அவிழ்த்தெறிந்து
அரை நிர்வாண அழகியாய்
சலனப் படுத்துகிறாய்
ஆரவாரம் கொள்ளக் காத்திருக்கும் தெரு
படுத்திருக்கும் மடக்குக் கட்டில்
பல்லிளிக்கும் நட்சத்திர முத்துக்கள்
அரை நிர்வாண நிலையில் நீ
ஒளி மூடிய உன் இரவு
வேறென்ன வேண்டும் நான்
மோகம் கொள்ள !
Monday, April 19, 2010
'மில்லி 'யால் கொள்ளி
சுள்ளி பொறுக்க போன
செல்வி அக்காவுக்கு
கருவேலங் காட்டுக்குள்ளையே பொறந்தான்
மொத பையன்.
மூக்கு சீந்திவிடக்கூட ஆளில்லாம
சீள்பட்ட செல்விக்கென்று
தெனந்தெனம் ராத்திரி மட்டுந்தான்
ஒத்த ஆளு துணையுண்டு .
துணையாம் துணை
காபிக் குடிச்சாலே சண்டைக்குப் போகும்
கசவாளிப் பய
கண்ட கருமத்த குடிச்சா என்ன செய்வாம் ?
பொறவு
ஆளு அனக்கம் இல்லாம கெடக்கும்
ரெண்டு நாளு வீடு
வழக்கம் போல யாரும் கண்டுகிடல
பக்கத்து வீட்டு பொம்பள பாத்து அலறி
ஊர கூட்டுத வரைக்கும் .
செய்தி : கணவன் தொல்லையால் விஷம் அருந்தி தாய் சேய் மரணம் .
செல்வி அக்காவுக்கு
கருவேலங் காட்டுக்குள்ளையே பொறந்தான்
மொத பையன்.
மூக்கு சீந்திவிடக்கூட ஆளில்லாம
சீள்பட்ட செல்விக்கென்று
தெனந்தெனம் ராத்திரி மட்டுந்தான்
ஒத்த ஆளு துணையுண்டு .
துணையாம் துணை
காபிக் குடிச்சாலே சண்டைக்குப் போகும்
கசவாளிப் பய
கண்ட கருமத்த குடிச்சா என்ன செய்வாம் ?
பொறவு
ஆளு அனக்கம் இல்லாம கெடக்கும்
ரெண்டு நாளு வீடு
வழக்கம் போல யாரும் கண்டுகிடல
பக்கத்து வீட்டு பொம்பள பாத்து அலறி
ஊர கூட்டுத வரைக்கும் .
செய்தி : கணவன் தொல்லையால் விஷம் அருந்தி தாய் சேய் மரணம் .
Friday, April 16, 2010
செய்யப்பட்ட தற்செயல்கள் !
பின்னொருநாளில்
மறுபடியும் பார்ப்பேனென்று
முன்னமே தெரியாது
தற்செயலாய் சந்திக்க நேர்ந்தது
நற்செயலாகத்தான் தெரிந்தது
ஒரே வாரத்தில்
பல
தற்செயல்கள் செய்யப்பட்டன
மீள்சந்திப்பு
நாள்கணக்கில் நீண்டது
ஆயுசுக்கணக்கில் நீளுமா ? தெரியாது ..
நீளலாம் அல்லது நீங்கலாம்
ஆனால்
இப்போதைக்கு
'மறுபடியும் பார்த்தோம் - பேசினோம் '
அவ்வளவுதான் !
டிஸ்கி : யாருகிட்டயாவது சொல்லனும்னு தோணுச்சி அதான் இங்க .. இப்படி
மறுபடியும் பார்ப்பேனென்று
முன்னமே தெரியாது
தற்செயலாய் சந்திக்க நேர்ந்தது
நற்செயலாகத்தான் தெரிந்தது
ஒரே வாரத்தில்
பல
தற்செயல்கள் செய்யப்பட்டன
மீள்சந்திப்பு
நாள்கணக்கில் நீண்டது
ஆயுசுக்கணக்கில் நீளுமா ? தெரியாது ..
நீளலாம் அல்லது நீங்கலாம்
ஆனால்
இப்போதைக்கு
'மறுபடியும் பார்த்தோம் - பேசினோம் '
அவ்வளவுதான் !
டிஸ்கி : யாருகிட்டயாவது சொல்லனும்னு தோணுச்சி அதான் இங்க .. இப்படி
Subscribe to:
Posts (Atom)