Wednesday, August 26, 2009

நன்றி : இணையம்


ஏதோ ஒரு
அடர்ந்த கருப்பு கவியும்
நிழற்பிரதேசத்தில்
முகம் மறைத்து நிற்கிறேன்
எதிர்பாரா தருணங்களில்
கொதித்த ரத்தநாளங்கள் பீறிட்டு
சதை பொதிந்த உடலெங்கும் ரத்தத்தின் கோரங்கள்
நரம்புகள் பின்னிய மூளையின்
எந்திர சத்தங்களுக்குள்
குரலேற்றி கத்த முனைந்து தோற்று
உறக்கங்கள் தொலைத்து
உறவுகளுடைத்து வேற்றுகிரகவாசியாய் திரிகிறேன்
கண்களுக்குள் வீசிய
வெண்ணிலாவின் வெளிச்ச படிமங்கள்
இராப்பொழுது உணவாகின்றன
கேளாத்தொலைவிலிருந்து
மாயை போல உன்குரல் - எனைச்
சேர்ந்தோ , சேராமலோ திரும்பியிருக்கலாம்
தெரியவில்லை .
கொதித்து வெடித்த ரத்த நாளங்களால்
உடல் முழுமையாய் வெந்துபோயிருந்தது .

-ஜெனோவா

1 comment:

Anonymous said...

Ithu enna Love Failure Kavidhaiya?
I can't Classify it. If it s so,Really Great Outcome of the Feel
-Indu