Friday, August 28, 2009

அழகெடுத்து அருந்தியவள் !


மூன்றாம் ஜாமத்தின் நடுவில்
வந்த கனாவில்
தெரிந்த புரவிக்கு மூன்று கண்கள்
ரெட்டை கொம்புகள் இருந்த முதுகில்
பஞ்சு தலையணைகள்
மூன்றாம் கண்ணின் பால்வெளி வெளிச்சம்
எனை விழுங்கி
இழுத்துக்கொண்டோடியது
பிடரிமயிர் கூச்செறிய - அதன் வேகம்
அண்டத்தில் பாதியை அரைநாளில் அளப்பதாயிருந்தது
நடுவில் வந்த மலைகளை
கடந்து பறந்து ஓடி
கடைசியில்
நந்தவனத்தில் நின்றபோது - அதிசயித்தேன்
பிரபஞ்சத்தின் ஒளி படிமங்களனைத்தும்
கூடியதுபோலொரு
தேவதையர் கூட்டம்
சற்றே விலக்கினேன் பார்வையை
கூட்டத்தின் நடுவிலே
ஒருபானை அழகெடுத்து அருந்திவிட்டு
அமர்ந்திருந்தாய் நீ !
நீ குடிக்கையில்
அங்கங்கே சிதறிய சில துண்டங்கள்
அல்லிப்பூவாய் மலர்ந்திருந்தன .
ஏதோ ஒன்று நிகழ்வை கலைக்க - திரும்பினேன்
புரவிகள் மாயமாயிருந்தன
மாயங்களின் தாக்கம் குறையாமல் - முன் திரும்பினேன்
தேவதைகளும் மாயம் இப்போது -
நீ
என்னை நோக்கி வர ஆரம்பித்திருந்தாய்
நான்
கனவினை நீட்ட முயன்று கொண்டிருந்தேன் !

-ஜெனோவா

1 comment:

ammu said...

kanavu gurathu oru ulagam atha needika seiyarathu oru dhiyanam mathiri yanathu .. naane oru puthiya ulaguku ponamathiri erunthichu ethai padichathuku aparam.