Wednesday, September 2, 2009

பல்லியின் வால்



நாலைந்து பேர் அரிவாளோடு
 
துரத்திக்கொண்டு விரட்டி வருகையில்
 
வியர்த்து ஓடி
 
முன்கல்லில் காலிடறி விழுவதற்கு முன்பே
 
கழுத்தின் மத்தியமாய்

ஆழமாய் விழுந்தது ஒரு வெட்டு

அலறிக்கொண்டு எழ
 
வியர்வையாய் உறக்கம் வெளியேறியது
 
பயத்தில் நிரம்பிய மூத்திரப்பையால்
 
பாதி உறக்கத்திலேயே போகவேண்டியதாயிற்று
 
வேண்டுமென்றே
 
இழுத்து சாத்தி அடிக்கையில்
 
கதவிடுக்கில்
 
அறுபட்டு துடித்துக்கொண்டிருந்த
 
பல்லியின் வால்
 
ஏனோ
 
கனவில் வந்த

என்னையே பிரதிபலிப்பதாயிருந்தது !

 

-ஜெனோவா

--
Posted By ஜெனோவா to கைகாட்டி மரம் !! at 9/02/2009 01:49:00 AM

4 comments:

Anonymous said...

A simple feeling Expressed Greatly once again in simple words
-Indu

அணையான் said...

Excellent!!!

அணையான் said...

Marathahalli pakkam,
Naama adi vaangaatha area ve kidaiyaathu....

illa nanba ????

ஜெனோவா said...

aama Nanba... Naatharithanam panninaalum naalu perukku theriyapadathu.. puriyapadaathu.. aama..