Saturday, September 19, 2009

உன்னைப்போல் ஒருவன் !!

கணக்கிலேழுதிவிட்டு
அண்ணாச்சி கொடுத்த
அரைக்கிலோ நாட்டுத்தக்காளி
அரைமுடி தேங்காய்
முருங்கைக்காய் இளசாக இரண்டு
முட்டைகோஸ் பாதி
கொசுறாக
கொஞ்சம் கருவேப்பிலையும் மல்லித்தளையும்
வாங்கித்திரும்புகையில்

கூப்பிட்டு
இரண்டு கையெறி குண்டுகளும்
போட்டுவிட்டார் மளிகை சாமான் பையில் .


1 comment:

அணையான் said...

super Appu!!!

nallaaa sonneenga neenga