Thursday, September 17, 2009

கூட்டிக்கொண்டு போய்விடு சீக்கிரம் !


குளிருக்குள்ளிருந்த அதிகாலை உறக்கத்தில்

முதுகில்தட்டி எழுப்பிவிட்டாய்

தலைக்குளித்திருந்தாய்

என்னுள் ஈரம் அப்பிக்கொண்டது .

"வெளியில் தூறல் போடுகிறது "

என்ன செய்யலாமென்பதுபோல் கண்ணடித்தேன்

கலங்கரை விளக்கத்தின் ஒளி

விட்டு விட்டு

வீட்டை வெளிச்சமாக்கிகொண்டிருந்தது

ஜன்னல்கம்பி ஊடே கடல் பார்த்தாய்

நான் ஷூக்கள் அணிந்துகொண்டேன் .

"நிறைய பேசணும்டா"

என்ன ?

"நீ வந்து பார் அதை "

எதை ?

ஆறுமணி காலையில்

அரை தூக்கத்தில் எழுப்பிபேச என்ன இருக்கும் ?

குழப்பத்தில் குழம்பிப்போய்

சொல்லும்மா ...

கட்டாயமாய் கையைபிடித்திழுத்து

முட்டளவில் கடலலை ...

குழப்பத்தில் வெறுப்பை பேசும் முன்னால்

கண் சிமிட்டி

வாயில் விரல் வைத்து

பேசாமல் வாவென்பதுபோல் சைகை செய்து

கைவீசி முன்னால் நடந்துக்கொண்டிருக்கிறாய்

கடலலையின்மேல் !!

 

2 comments:

chandru / RVC said...

நல்லா இருக்குங்க

ஜெனோவா said...

Vaanga RVC, Romba Nanri.. Thodarnthu ookkapadutthunka..

Vaalthukkal