Monday, October 26, 2009

தாய்க்கோழி



சத்தம் கேட்டு புறக்கடைக்கு ஓடுவதற்குள்
செவலை நிற குஞ்சியை மட்டும்
காகமோ பருந்தோ தூக்கிவிட்டுப் போனதை
கடிதத்தில் எழுதியிருந்தாள் அம்மா.
பறிகொடுத்த ஆத்திரத்திலும்
பயத்திலும் கெக்கரித்து
அங்குமிங்கும் ஓடிக்கொண்டிருக்கும்
தாய்க்கோழியின் கண்கள் மனதில் வந்தன.
இனிமேல்
படியில் தொங்கிக்கொண்டு போகக்கூடாதென
மனதுக்குள் சொல்லிக்கொண்டேன் .

11 comments:

Anonymous said...

Nice...

Priya said...

நன்றாக இருக்கிறது...

ஜெனோவா said...

ரொம்ப நன்றி , அனானி நண்பரே !
வாங்க பிரியா , ரொம்ப நன்றி !

மண்குதிரை said...

wow ithu nalla irukku nanba

ஜெனோவா said...

நன்றி மண்குதிரை !!

வாழ்த்துக்கள் , தொடர்வோம் !!

ப்ரியமுடன் வசந்த் said...

அழகா இருக்கு..படமும் கவிதையும்

ஜெனோவா said...

வாங்க வசந்தண்ணே , ரொம்ப நன்றி !!

சேரலாதன் பாலசுப்பிரமணியன் said...

நல்ல உணர்வு தோழரே! உங்கள் நடையும் அழகாக இருக்கிறது. வாழ்த்துகள்

-ப்ரியமுடன்
சேரல்

ஜெனோவா said...

Nanri sEral, thodarvom

Marimuthu Murugan said...

....

மிகவும் அருமை ஜோ...

....

J S Gnanasekar said...

நன்று