பொழுதுக்கு ஒன்றாய்
விழுங்கும் மாத்திரைகளை போல இருக்கிறது
உன்னை மறப்பதற்கு
நீ கற்றுத்தரும் வித்தைகள் .
கெட்ட கனவாக நினைத்து
நீ சொன்னதுபோலவே
கனவுகளை சாகடித்துவிடுவேன்
நினைவுகளை என்ன செய்ய ?
காதலின் வீரியத்திலிருந்து
விளைந்த மரம்
முன்னெப்போதுமில்லாத அளவிற்கு
மௌனத்தின் விதையாகிறது.
மறந்துவிடும் நோக்கில்
எங்கெல்லாமோ சுத்துகிறது உடல்
நிழல் நீ என்பதை
மறந்துவிட்டு .
பீறிடும் அழுகையை
குமுறிடும் நெஞ்சை
பிரிந்திடும் உன்னை
என்னசெய்வதென்று தெரியவில்லை
"பெருவாழ்வு வாழ்வாய்" என
வாழ்த்தி செல்கிறாய் - சென்று வா
தண்ணீருக்குள் வளர்ந்தாலும்
பட்டமரம்தான் இனிமேல் நான் .