Thursday, August 26, 2010

பறந்தபடியே இருக்கட்டும் இறகு !

பறவையிடமிருந்து
பிரிந்த கதை தெரியாமல் இன்னும்
பறந்தபடியே இருக்கிறது
இந்த இறகு
தள்ளாடி ...தள்ளாடி
தரையை முட்டும் பொழுதில்
அவசரமாய் நான் செய்த
மூச்சுக்காற்றின் மீதேறி பறந்து
மறைந்த அது
உங்களிடமும் வரக்கூடும்
தயவுசெய்து
ரகசியம் காத்திருங்கள் - முடிந்தால்
ஒரு காற்றை செய்தனுப்புங்கள்
பறந்தபடியே இருக்கட்டும் இறகு !

Thursday, August 19, 2010

பொழப்பு ...

செல்வி உன்ன கருவாயனு சொல்லிட்டாடா
செம சண்ட
நல்லா திட்டிட்டு வந்திட்டேன்
நீ கலரா இல்லானாலும் களையா இருக்கடா
இதே எனக்கு போதும்
உனக்கு என்ன புடிச்சிருக்காடா ? நான் அழகா இருக்கேனா?
கல்யாணம் பண்ணிக்கலாம்டா
நா வேலைக்கெல்லாம் போகமாட்டேன்
எங்க அப்பாகிட்ட போய் பேசுறியா ? ஆனா நான் வரமாட்டேன் .. சரியா ?
ஏஏய்.. என்ன எல்லாத்துக்கும் ஒரு இளிப்புதானாடா ?

எல்லாத்துக்கும் சிரிப்புதான் ... சிரிப்பாய்தான் இருந்தது !


அவன் என்ன மறக்க ரொம்ப கஷ்டபடராண்ணா...
என்ன கருமத்துக்காம் ??
இது காதல் ணா.. காதல் ...


இதுக்கும் சிரிப்புதான் ... சிரிப்பாய்தான் இருக்கிறது !
அப்போது பதில் சொல்ல பிடிக்காது
இப்போ பதில் சொல்ல முடியாது .

Tuesday, August 17, 2010

கூரைகளில்லா சுற்றுச்சுவர்
என் வீடு
கலைந்து கிடக்கும் வார்த்தைகள்
என் கவிதை
களைந்து கிடக்கும் உணர்வுகள்
என் நிர்வாணம்
வரையறுக்கவியலா வானம்
என் வாழ்க்கை
கொள்ளிலடங்கா வெற்றிடம்
என் காதல்