Wednesday, January 5, 2011

நாடகம் !

எச்சிலூற நா தொங்கவிட்டு
சிங்கநடை நடப்பது போல
பாவலாக்காட்டி
ஓடியும் ,

நின்று
சதிசெய்து பின்
மெல்ல பூனை நடை
நடந்தும் ,

திட்டமிட்ட
ஒரு நரியைப்போல
மாறுவேடமிட்டு
பதுங்கியும் ,

எல்லாம் விடுத்து நாயாகவே ஆனபின்பும் ,

அணிலை கோட்டைவிட்டது
கடைசிவரையில்
அணிலாக நடிக்கத் தெரியாத நாய் !