Thursday, October 29, 2009

அழுகி நாறிய வாழ்க்கை !


மாறச்சொன்னது வயது -
விரும்பவில்லை நான் .
மாற்றம் வேண்டுமென்றது காலம் -
அப்புறம் பார்ப்போம் என்றேன்.
வேறு மனிதனாய் மாறி வா என்றது காதல்
தூக்கியெறிந்தேன் காதலை.
வயதும் வழியும் இழந்து
நின்ற கணமொன்றில்
மாறித்தான் பாரேன் என்றது மனது -
தோல்வியைக்கண்டு மாறும்
கோழை நானில்லை என்றேன் நான் .
அலைகளால் அலைகழிக்கப்பட்டு
கரை ஒதுங்கிய பிணமொன்றைப்போல
இக்கணத்தில்
மாற்றத்தின் வீச்சத்தில் நாரிக்கிடக்கிறேன்.
என்னிலைகண்டு
பல்லிளித்த இயற்கைக்கு
நான் இன்னும் மாறவில்லைதான்
மாற்றம்தான்
மாறிவிட்டதென பதிலளிக்கிறேன் .
யாரோ
என்னைப்பார்த்து ஏளனமாய்
பேசி சிரித்து
சுற்றிக்கொண்டிருக்கிறார்கள் இந்நிலையில்.

4 comments:

Anonymous said...

Super Joe....

ஜெனோவா said...

Thanks anony friend!!

J S Gnanasekar said...

நன்று

Anonymous said...

Yealai en arumai Thambi.. just i now i am seeing all your poems..
seekiram oru kavithai thoguppu veliyidu... Valthukkalum Valarchiyum unakku endrum urithagatum.
Anbudan un Annan- Arockiam