Tuesday, December 8, 2009

ஈரம் !


இட்லியும்
மல்லிச்சட்னியும் நம்மூர் மாதிரி
நல்லாயிருக்கும்னு
கூட்டிட்டுப் போனான் நண்பன் .
சாம்பார் கூட விசேஷமாகத்தான் இருந்தது
பில்லும் குறைச்சல்தான்
நாளைக்கும் இங்கயே சாப்பிட
வந்திருப்பேன்
கை அலம்புகையில்,
தடுப்புக்குப் பின்னால் தொட்டித்
தண்ணீரில் நின்றுகொண்டு
தட்டைக் கழுவும் உன்
முகத்தை மட்டும்
பார்க்காமலிருந்திருந்தால் !

17 comments:

மண்குதிரை said...

மனசு கனமாயிடுச்சு

அந்த போட்டோவும் ரொம்ப டிஸ்பப் பண்னுது

Anonymous said...

Very touching...
Everyone should feel it...

நேசமித்ரன் said...

நிறைவான கவிதை

Katz said...

மனசை நனைச்சிடுச்சு!

Marimuthu Murugan said...

ரொம்ப நல்லா இருக்கு நண்பா...
அந்த பையன் போட்டோவுலயாச்சும் சந்தோசமா இருந்தா நல்லா இருக்கும்...

ஜெனோவா said...

@நன்றி மண்குதிரை நண்பா !
@ நன்றி அனானி !
@நன்றி நேசாண்ணே!
@நன்றி வழிப்போக்கன்
@ நன்றி முத்து!

Priya said...

ஆரம்பிக்கும்போது ஏதோ சாப்பாடு பற்றிதான்னு நினைச்சேன்.... ஆனா என்ன சொல்றது, இதயத்தின் ஓரமா ஒரு வலி.... முக்கியமா போட்டோ என்னவோ பன்னுது மனசை.....

தமிழ் உதயம் said...

நம்மால் என்ன பண்ண முடியும். கவிதை தான் எழுத முடியும். இடுகை தான் போட முடியும்.

இரசிகை said...

:(

vali.....!

இரசிகை said...

naan jenova-nu oruththar yezhuthiya "sathuranga naayagi"-ngira kavithaiyai aanantha vigadanil padiththen.

athu neengalaa?

ஜெனோவா said...

@ நன்றி பிரியா!
@ நன்றி தமிழுதயம்!
@நன்றி இரசிகை!
அந்த ஜெனோவா நாந்தாங்க , இங்கப் போய் பாருங்க சதுரங்க நாயகியை ...

http://joemanoj.blogspot.com/2009/10/blog-post.html

Chitra said...

திருநெல்வேலி தண்ணி மகிமை, கவிதையில் தெரியுது. வாழ்த்துக்கள்.
அருமையாக உணர்வுகளை வெளிப்படுத்துகிறீர்கள்.

ஜெனோவா said...

மிக்க நன்றி சித்ரா ,
அய், நீங்க கான்வென்ட்ல படிச்சீங்களா ?, நான் உங்களுக்கு அடுத்த ஸ்கூல் .. அதேதான் அந்த ditrict library பக்கம் ;-)

அடலேறு said...

வலியை வார்த்தைபடுத்தியிருக்கிறீர்கள்

creativemani said...

வார்த்தைகள் இல்லை ஜெனோவா.
வலியை மட்டுமே உணர முடிகிறது...
நல்லா இருக்கு...

ஜெனோவா said...

நன்றி அடலேறு !
நன்றி மணி ;-) !

சுந்தர்ஜி said...

தொண்டையில் நிற்கிற்து அந்தப் புகைப்படக் குழந்தையின் சோகம்.ஒரு கவிஞன்தான் இட்லியையும் தாண்டி வாழ்வின் வலியை ருசிக்கிறான்.நெகிழ்ச்சி ஜெனோ.