Friday, April 16, 2010

செய்யப்பட்ட தற்செயல்கள் !

பின்னொருநாளில்
மறுபடியும் பார்ப்பேனென்று
முன்னமே தெரியாது
தற்செயலாய் சந்திக்க நேர்ந்தது
நற்செயலாகத்தான் தெரிந்தது
ஒரே வாரத்தில்
பல
தற்செயல்கள் செய்யப்பட்டன
மீள்சந்திப்பு
நாள்கணக்கில் நீண்டது
ஆயுசுக்கணக்கில் நீளுமா ? தெரியாது ..
நீளலாம் அல்லது நீங்கலாம்
ஆனால்
இப்போதைக்கு
'மறுபடியும் பார்த்தோம் - பேசினோம் '
அவ்வளவுதான் !


டிஸ்கி : யாருகிட்டயாவது சொல்லனும்னு தோணுச்சி அதான் இங்க .. இப்படி

8 comments:

இரசிகை said...

yaaru?yenna?yaethu?-nu vivaram kekkaamal thalai saayikka madi koduththa kavithaiyum..,
valaith thalamum azhakaana vishayam thaane?...:)

இரசிகை said...

ok........
yethu yeppadiyo..,jeno

neengal neengalaakave irungal..:)

பத்மா said...

சில இப்படித்தான் .பகிர்ந்ததிற்கு நன்றி .all the best .

Priya said...

//'மறுபடியும் பார்த்தோம் - பேசினோம் '
அவ்வளவுதான் !//

புரிஞ்சிப்போச்சு ஜோ! அவ்வளவுதான்னு சொல்லிட முடியுமா... ஏன்னா இப்ப இங்க வார்த்தைகளா வந்திருக்கே!?!

//ஆயுசுக்கணக்கில் நீளுமா ? தெரியாது ..
நீளலாம் அல்லது நீங்கலாம்//... அழகா இருக்கு இந்த வ‌ரிக‌ள்!(என‌க்கென்ன‌வோ நீங்காமா நீளும்னு தோணுது;)

Anonymous said...

Everything is pre-written.Letz wait and see....

Very good feeling which can be realized by me.....

Thanks....

--yel.

"உழவன்" "Uzhavan" said...

இது தற்செயலான பின்னூட்டமே :-)

VELU.G said...

தற்செயலாய் பார்த்தேன் படித்தேன்

மீண்டும் தற்செயல்கள் உருவாக்கப்படுமா தெரியாது

இருக்கலாம் இல்லாமலும் போகலாம்

யாரிடமாவது சொல்ல நினைத்தேன்
உங்களிடமே சொல்கிறேன்
கவிதை நன்றாக உள்ளது

அன்புடன் அருணா said...

தற்செயல் நன்றாகவே இருக்கிறது.