Monday, April 26, 2010

நாலே நாலு நாள் !

"நாலு நாள் கழிச்சி வந்து வாங்கிக்கப்பா " என்று
பால்காரனிடம் சொல்லும்
அதே பதில்
கொஞ்சம் தொனி மாறி
"நாலாந் தேதிக்கப்புறம் தந்துடுறேன் "
என்றாகிப்போகும் வட்டிக்காரனிடம் .

நாலாம் தேதியும்
மாமா பூ வாங்கிவரவில்லையெனில்
ரெண்டு தெரு தாண்டிச்சென்று
கோமதி அக்காவிடம் அதே
"நாலு நாள் மந்திரத்தை"
சொல்லவேண்டியிருக்கும் .

நாலு நாலு நாட்களாகவே
தொடரும் அக்காவின் மாதம்
மாதக்கடைசி வரும்போது
ஏழாவது முறையாக
மீண்டும் ஆரம்பிக்கும்
வெவ்வேறு தொனிகளுடன் !

9 comments:

பத்மா said...

யதார்த்தம்

Priya said...

மிக யதார்த்தமான வாழ்க்கை முறையை அழகா எழுதி இருக்கிங்க ஜோ!

இரசிகை said...

innilaiyaik kadanthu sellaatha vaazhvaip petra manitharkal migak kuraivuthaan...........:(

Anonymous said...

Very nice..

-yel.

மங்குனி அமைச்சர் said...

//நாலாம் தேதியும்
மாமா பூ வாங்கிவரவில்லையெனில் ///


என்னமா உள் குத்து குத்துரிங்க

"உழவன்" "Uzhavan" said...

பெரும்பாலும் வாழ்க்கை இப்படித்தான் போகிறது..

ஜெனோவா said...

நன்றி பத்மா !
நன்றி பிரியா !
நன்றி இரசிகை !
நன்றி yel!
நன்றி மங்குனி அமைச்சரே !
நன்றி உழவன் ,என்ன செய்ய .. இப்படித்தான் போகுது ;-(

rvelkannan said...

கனக்கிறது

ஜெனோவா said...

நன்றி வேல்கண்ணன் !