Sunday, September 13, 2009

இரு கவிதைகள் !!

"அரை மாத்திரை மட்டும் போடுங்க "
டாக்டரின்
அறிவுறுத்தலை மறந்து
அரை மணிக்கொன்றாக
மூன்று போட்டபிறகும்
இன்னும் எழுதிக்கொண்டிருக்கிறேன்
காணமல் போனவர் பெயர்
உறக்கம் என்று !!


-----------------------------------------------------

கண்ணை மூடினால்
காலையில் பார்த்த
கோரமான சாலை விபத்தே
வந்து போகிறது !
என்னருகில் நின்றிருந்த
பார்வையற்றவர்க்கு
நல்லவேளை
இந்த பிரச்சனை இருக்காது !!.


-ஜெனோவா

4 comments:

மண்குதிரை said...

rendaavathu enakkup pitiththirukkirathu

ஜெனோவா said...

முதல் வருகைக்கு வரவேற்பும் & நன்றிகளும் மண்குதிரை ,
எழுத்தை மேம்படுத்த தொடர்ந்து ஊக்கபடுத்துங்கள் .

நன்றியும் வாழ்த்துக்களும்

chandru / RVC said...

ரெண்டாவது மேட்டர் நல்லாயிருக்கு. இன்னும் கொஞ்சம் வீரியமா சொல்லிருந்தீங்கன்னா, சிறந்த கவிதை கிடைச்சிருக்கும். தொடர்ந்து எழுதுங்கள்

ஜெனோவா said...

முதல் வருகைக்கு வரவேற்பும் & நன்றிகளும் RVC ,
தொடர்ந்து ஊக்கபடுத்துங்கள் .

நன்றியும் வாழ்த்துக்களும்