Monday, September 21, 2009

காக்கை கூடு !!

எங்கள் வீட்டுமுன் வேப்பமரத்தில்
புதிதாக
இரண்டு காக்கைகள் கூடுவைத்துள்ளன .

காக்கைகளினால்
பொழுதுகளில் சங்கடமும்
சமயங்களில் பலன்களும் வரலாம் .

நாளை மறுநாள் வரப்போகும் பங்காளிகளை
இன்றே
கரைந்து காட்டிக்கொடுத்துவிடும் .

தப்பித்தவறி எச்சமிட்டுவிட்டாலும்
நல்ல அதிஷ்டக்காரன் என்றொரு
பட்டம் கிடைக்கும் .

ஆனால்
இவள்தான் .....

கூட்டிலிருந்த கருவேல முள் விழுந்து
முற்றம் முழுவதும்
குப்பையாகிரதென்பாள் .

துணி தொவைத்து ஒன்றைக்கூட
மரத்தடியில்
காயபோட முடியவில்லை என்பாள் .

காக்கை என்பதை
அருவருப்பாய் மட்டுமே பார்ப்பவளுக்கு
எப்படி புரியவைப்பது ?
இந்த கூடு
நிறைய நேரங்களில்
தயிர் பிசைந்து ஊட்டிய அம்மையை
நினைவுபடுத்துகிறதென்பதை.


குறிப்பு : அவள் என்பதை வீட்டுக்காரி என்றும் அவளுக்குத்தெரியாமல் பொருள் கொள்ளலாம் .

2 comments:

அணையான் said...

eppadi puriyavaippathu?
intha koodu
niraya nerangalil
thayir pisainthu oottiya ammayai
ninaivupaduthukirathuenbathai

super appu!

Best beginning Machi....Keep posting....

ஜெனோவா said...

Thanks Machi!!Keep reading!!