Monday, September 28, 2009

மழைத்துணி துடைத்தெடுத்திருந்த
கண்ணாடி தார்ச்சாலை
வெளிச்சங்களாய் நின்றிருந்த
உலோக மரங்கள்
நடுநிசியாதலால்
நாய்கள் கூடும் ரோடுகள்
முன்பக்கம் முழுவதுமாய் சப்பிய பைக்
மண்டை உடைந்தொளுகிய ரத்தம்
வேட்டைக்குத் தப்பிய மானொன்றைப்போல
நாலுகால் பாய்ச்சலில் வாகன விலங்குகள்
சரேலென்று கடந்து சென்றது
ஒரு கால் சென்டர் குவாலிஸ்
அதைதொடர்வதாய் ஒரு லாரியும்
பின்
ஒரு சுமோ என
வரிசையாய் ஒவ்வொன்றாய் வரத்தொடங்கின
கடைசியில் வந்தான் ஒரு சைக்கிள் காரன்
பார்த்து
படபடத்து அலறி
கூட்டம் கூடுவதற்குள்
அநேகமாய் செத்து போயிருந்தேன் நான் .

3 comments:

அணையான் said...

Excellent!!! overwhelming!!!

Come on Joe!!! amazing da Nanba

Katz said...

ungaloda neraiya kavithai nalla irukkunga!

ஜெனோவா said...

நன்றி மோகன் ( கொஞ்சம் லேட் ஆயிருச்சோ ;-)) )

நன்றி வழிப்போக்கன் , தொடர்ந்து வந்து ஊக்கப்படுத்துங்க .

வாழ்த்துக்கள்