Friday, September 25, 2009

புழு(து)க் கொலை !!

வெளிக்கிருக்கச்செல்கையில்

தோட்டத்தில்

நேற்று பார்த்த இடத்திலேயே பார்த்தேனந்த மண்புழுவை .

முதுகில் ஒட்டியிருந்த

மிகச்சிறு சிறு மண் உருண்டைகளோடு

நீண்டு சற்று தடித்து

அடர் கருஞ்சிவப்பு நிறமாய்

அசைவுகளற்று இருந்தது .

மண்புழுவில் நிறைய நேரங்களில்

முன் பின் பாதிகள்

கண்டுகொள்ள முடிந்ததில்லை

மலம் கழித்துக்கொண்டே

அருகிலிருந்த விளக்குமாத்துக் குச்சியால்

லேசாக குத்தினேன்

அமைதியான இயக்கம் பார்க்கமுடிந்தது .

வீட்டுக்குள்ளிருந்து

அம்மா சத்தம்போட்டு கூப்பிட்டாள்

விருட்டென எழுந்து

குதிங்கால் ரப்பர் செருப்பால்

தலையெனப்பட்டதை

அரக்கிவிட்டு ஓடுவதற்கு முன்னால்

நசிந்து இறந்திருந்த புழுவை

யாரும் பார்க்காதவாறு

மண்ணுக்குள்

புதைத்துவிட்டு ஓடியாந்தேன் .

"சாமியிடம் அப்புறம் சொல்லிக்கொள்ளலாம் நடந்த கொலையைப்பற்றி "

மனதுக்குள்

ஒரு திட்டமும் போட்டாயிற்று இப்போது .

3 comments:

அணையான் said...

innum konjam venum nanba!!! yarum sollaatha yathaarthangalin thuvakkam, mudivin iruthiyil pal ilikkirathu.. :-) so finishing touch innum konjam venum nanba!!!

Anonymous said...

Nalla irruku sir......

ஜெனோவா said...

Thanks Mohan & anony friend..