Wednesday, May 5, 2010

எதிரெதிர் !

வரம் வாங்கி
மீள்கையில்
சாபம் கொண்டு வரும்
ஒருவரையாவது
எதிரெதிரில்
சந்திக்க வேண்டியுள்ளது .

வாங்கி வந்த வரம்
சாபமென்றாக
வந்த இடத்திலேயே
சேர்த்துவிடலாமென்று
திரும்பிச் செல்கையில்
வரம் வாங்கி எதிர்வரும் ஒரு
புண்ணியாளன்
ஏளனப்பார்வை பார்த்துச் செல்கிறார்
ஒப்புக்கு சிரித்து வைப்பதை
தவிரவும்
எனக்கு வேறு வழியில்லை !

8 comments:

Marimuthu Murugan said...

அருமையா இருக்கு ஜோ..

நேசமித்ரன் said...

வரங்கள் எல்லாம் சாபங்களானால்
தவங்கள் எதற்காக

என்ற அப்துல்ரகுமானின் வரி நினைவுக்கு வந்தது நண்பா

நல்லா இருக்கு :)

பா.ராஜாராம் said...

:-)

நல்லாருக்கு ஜெனோ.

இரசிகை said...

ada!

Priya said...

வரமும் சாபமும்.... எதிரெதிரா?!

நைஸ்!

கமலேஷ் said...

ரொம்ப நல்ல இருக்கு தோழரே...

Anonymous said...

Nice Joe...

-yel.

ஜெனோவா said...

மாரிமுத்து , நேசமித்திரன் ,பா.ரா ,இரசிகை ,பிரியா ,கமலேஷ் , yel , அனைவருக்கும் நன்றி நண்பர்களே !