Friday, May 7, 2010

உஷ்ணம் குழைத்த பிரியம் !

தீர்ந்த மழையில்
உடல் விறைத்து நிற்கும்
குல்முகர் பூக்களின் மரத்தினடியில்
ஒரு கோடைகாலத்தின்
வெம்மையோடு
தனிமைப்படுத்தப்பட்டிருக்கிறேன் .

தனிமைகள்
பெரும்பாலும் உஷ்ணமாயிருக்கின்றன
மரங்கள் அடர்ந்த இந்த பூங்காவிலும்
வெறுமை
ஒரு வெடித்த இலவத்தை போல
அலைந்து திரிகிறது .

காற்றில் மிதந்து வரும்
தனிமையின் இசை
ஒரு பஞ்சு மேகத்தைப்போல
எனைத் தொட்டு தடவி
பின்
வழிந்து வேறோரிடம் செல்கிறது .

அலுப்பு மேலோங்க
கண் இமைகளை
மெல்ல மூடிக்கொள்கிறேன்
இமைகளின் இருட்டுக் கண்ணாடியையும்
உடைத்து எட்டிப்
பார்க்கிறது தனிமை .

கடைசியில்
காற்றோடு கதைபேசிக்கொண்டே வந்த
குல்முகர் பூவொன்று
கலைத்துச் சென்றதென் வெறுமையை
எதற்கும் இருக்கட்டுமென்று எடுத்து
வைத்துக்கொள்கிறேன் என் குல்முகரை !

15 comments:

Priya said...

தனிமையை கூட இத்தனை அழகா ரசிச்சி வார்த்தைகளால் வர்ணிக்க முடியுமா!... உங்களால் அது முடிகிற‌து ஜோ.

ரசித்து படித்தேன்!!!

இரசிகை said...

****
மரங்கள் அடர்ந்த இந்த பூங்காவிலும்
வெறுமை
ஒரு வெடித்த இலவத்தை போல
அலைந்து திரிகிறது

இமைகளின் இருட்டுக் கண்ணாடியையும்
உடைத்து எட்டிப்
பார்க்கிறது தனிமை .

எதற்கும் இருக்கட்டுமென்று எடுத்து
வைத்துக்கொள்கிறேன் என் குல்முகரை
****
nallaayirukku.....!

நேசமித்ரன் said...

//காற்றோடு கதைபேசிக்கொண்டே//

பறவையே எங்கு இருக்கிறாய் பாட்டில் கதைபேசிக் கொண்டே வா காற்றோடு போவோம் என்று ஒரு வரி வரும்

இந்தக் கவிதையும் அந்தப் பாடலின் உணர்வைத்தருகிறது ஜெனோ

கவிதையின் பயணம் பிடித்திருக்கிறது
:)

Marimuthu Murugan said...

ஜோ = ஜோ

பத்மா said...

தனிமை சிலசமயம் வரம். பாதுகாத்து வைத்துக்கொள்ளுங்கள் அந்த குல்மொஹரை .அழகு கவிதை

tt said...

தனிமை ஒரு சுகம்.. அதைக் கவிதையாக்கியிருப்பது அழகு !

ஜெனோவா said...

ரொம்ப நன்றி பிரியா , ரசிக்கனும்னு முடிவு பண்ணிட்ட அப்புறம் தனிமையாவது ... ;-) ( இப்ப கொஞ்ச நாளா ரொம்ப நேரம் தனிமையாக வாய்க்கிறது அதனால்தான் ,இருக்கவே இருக்கு பாத்து நிமிஷ நடையில lalbagh பூங்கா )

மிக்க நன்றி இரசிகை , உங்களின் !! இந்த கவிதை ரொம்ப உணர்வுப் பூர்வமானது , நல்லாயிருந்தது ! ;-)

அண்ணே , எப்படி இருக்கீங்க ? இலக்கில்லாமல் போகும் பயணத்தில் ரொம்ப சிக்கல்கள் இருப்பதாக தெரியவில்லை ;-)) நன்றிண்ணே !
நன்றி மாரி, இப்படி ஒரு கொலைவெறியா ;-)

நன்றி பத்மாக்கா, தனிமைன்னா என்னானே தெரியாமலிருந்தது கல்லூரி காலங்கள் , இப்பொழுது தனிமைதான் பிரதானமாயிருக்கிறது .. சில நேரங்களில் கொடுமையை இருந்தாலும் பல நேரங்களில் நீங்கள் சொல்வது போல வரம் தான் .. ஆம் .;-)

நன்றி தமிழ் , எப்படி இருக்கீங்க ? ஆம் சுகமாகத்தான் இருக்கிறது சில நேரங்களில் ;-)

Unknown said...

அலுப்பு மேலோங்க
கண் இமைகளை
மெல்ல மூடிக்கொள்கிறேன்
இமைகளின் இருட்டுக் கண்ணாடியையும்
உடைத்து எட்டிப்
பார்க்கிறது தனிமை .//

மிக அழகு..

"உழவன்" "Uzhavan" said...

மனதை வருடும் மற்றுமொரு படைப்பு இது.

Anonymous said...

தனிமை தான் எயபொதும் நிரன்தரம் ஜொ.

--yel

ஜெனோவா said...

நன்றி ஆறுமுகம் முருகேசன் !
நன்றி உழவன் சார் !
நன்றி yel ! ( நீங்க சொன்னா சரியாத்தானிருக்கும் )

rvelkannan said...

கவிதையின் பயணம் பிடித்திருக்கிறது

Geetha said...

அழகு கவிதை.

ரசிக்க வைத்தது.

கமலேஷ் said...

மிகவும் அழகான கவிதை நண்பா...வாழ்த்துக்கள்....

ஜெனோவா said...

நன்றி வேல்கண்ணன் , கீதா மற்றும் கமலேஷ் !