Wednesday, August 5, 2009

காதலி என்ற வெற்றிடத்துக்கு !

இன்றோ
நாளையோ - ஏகாந்தம் நிரம்பிவிட்ட
வேறோர் நாளிலோ
நாம் சந்திக்க கூடும் !

மழைக்காக ஒதுங்கி நிற்கும் வேளைகளில்
பேரூந்து நிறுத்ததிலோ -
மதியஉணவு வேளைகளில் - ஏதோவொரு
உணவகத்திலோ -
இல்லை
ரயில் நிலையம்
கடற்கரையோர கடைகள்
வெள்ளிக்கிழமை கோவில்கள் ...
இப்படி எங்கோ சில இடங்களில்
உன் முகத்தோடு
என் நியாபகங்கள் முட்டிட நேரிடலாம் !

என் குழந்தையோடு நானும்
கணவனோடு நீயும்
எதிரெதிர் வழிகளில் கடந்து பிரியலாம் !
தாண்டிச்செல்லும்போதோ
தாண்டிய பின்போ - முகம் காணாமல்
முறுவலித்து செல்லலாம் !

காலமும் உன் கணவனும்
கண்திறந்தால் -
இரண்டொரு வார்த்தைகளை பரிமாறிகொள்வோம்
குடும்பம் , சொந்த வீடு
உடன்படித்த கீதா -- இப்படி
நீண்டுகொண்டே போகும்பேச்சில்
தயவு செய்து
"எப்படி இருக்கிறாய் " என்று மட்டும்
கேட்டுவிடாதே
அழுதாலும் அழுதுவிடுவேன் நான் !

-ஜோ

7 comments:

Anitha said...

unarchikalin kuviyalai oru kavithai.......expecting more from u each and every day...

Unknown said...

Kaalangal Maarupatalum....
manithargal verupatalum....
kathalitha
anaivarukum thonrum
maaratha unarvu -yendrum
nirkathu
intha kanneer..........
-indu

u can proudly say this is one of ur master piece

Unknown said...
This comment has been removed by the author.
ஜெனோவா said...

Thanks Ammu & Indu...;-)

Priya said...

(நீண்டுகொண்டே போகும்பேச்சில்
தயவு செய்து
"எப்படி இருக்கிறாய் " என்று மட்டும்
கேட்டுவிடாதே
அழுதாலும் அழுதுவிடுவேன் நான்!)
என்ன அழகான வரிகள்.....இது! ரசனையுடன் வலியும் அல்லவா சேர்ந்திருக்கு !

ஜெனோவா said...

Vaanga Priya, Muthal varukaikku nanri..

thodarnthu ookkapaduthunkal..

Nanriyum & Valthukkalum

Anonymous said...

Very nice feel....