
1. உள்ளொன்று வைத்து
வெளியொன்று பேசும்விதமாய் இல்லாமல்
வெளிப்படையாகவே
திறந்தும் வரவேற்றும் கிடக்கின்றன
மதுபான விடுதிகள்.
2. வண்ண விளக்குகளின் உச்சத்தில்
மின்னும் ஆடைகளுடன்
கண்சிமிட்டி ஆடும் நடனக்காரிகளிடம்
கவனம் தேவை .
சிலசமயம்
மனசையும் ஆட்டிவிடுகிறார்கள்
அதிலும் அந்த ஆரஞ்சுக்கலர்
சேலைக்காரி
கொள்ளைக்காரி .
3. இடுப்பில் குழந்தையுடன்
அவளை எங்கோ பார்த்திருப்பதாய்
நண்பன் சொன்னதிலிருந்து
ரசிக்கமுடியவில்லை
அவளின் அரையும் குறையுமான
ஆட்டத்தை .
4. எதை எதையோ
கலந்து கொடுத்தார்களென நினைக்கிறேன்
நல்லவேளை
சாராய நாத்தம் அடிக்கவில்லை
வீட்டுக்கு வந்தபோது .
5. விடியும்போது வந்து உறங்கி
முழிப்பு வரும் சமயம்
உணரப்படும் தலைக்குத்தலோடு
கூடவே வந்து போகிறது
நடனக்காரிகளின்
முகங்களும் .
11 comments:
நல்லா இருக்கு ஜெனோ!
நம்மாளா நீங்க..:-))
Nice.
மிக்க நன்றி பா.ரா சார்
ஆமாண்ணே நானும் சோசலிச கட்சி உறுப்பினர்தான் ;-)))
வாழ்த்துக்கள்
நன்றி அனானி நண்பரே ( உங்களை எனக்குத் தெரியுமென்றால் பெயரோடு வரலாமே , அனானி என்று எழுதும்போது சங்கடமாயிருக்கிறது ;-)) )
வாழ்த்துக்கள்
நல்லா இருக்கு ஜோ!!! குறிப்பா 3.
நன்றி மொக்க மாரி. ;-)
வாழ்த்துக்கள்
//சிலசமயம்
மனசையும் ஆட்டிவிடுகிறார்கள்
அதிலும் அந்த ஆரஞ்சுக்கலர்
சேலைக்காரி
கொள்ளைக்காரி .//
எங்கிருந்தோ வந்து மனசை அள்ளிப்போகும் பூவாசம்போல?!
//இடுப்பில் குழந்தையுடன்
அவளை எங்கோ பார்த்திருப்பதாய்
நண்பன் சொன்னதிலிருந்து
ரசிக்கமுடியவில்லை
அவளின் அரையும் குறையுமான
ஆட்டத்தை .//
நல்ல அவதானிப்பு!
நன்றி விந்தைமனிதன் !
வாழ்த்துக்கள்
ம்ம்.....அனுபவமா?(ச்சும்மா கேட்டேன்)
நல்லாயிருக்கு!!!
இதையெல்லாம் அனுபவித்து பார்க்கலாம்னா... எங்க விடுறாங்க நம்ம தாய் திருநாட்டில் ...
( எல்லாம் ஒரு வையித்தேரிச்ச்சல்தான் ;-) )
மிக்க நன்றி பிரியா.
வாழ்த்துக்கள்
Post a Comment