Monday, November 2, 2009

நீர்த்துப்போனவைகள் !


கரும் பெரும் விழிகள் முழித்து
மீசை முறுக்கி
அருவாளேந்திய அய்யனார் சாமி
தப்பு செய்பவர்களை கண்ணை குத்துமென்று
சிலையைக்கடந்து வெளியூர் செல்லும்போதெல்லாம்
சொல்லிக்கொண்டே வருவாள் பாட்டி .
வெயிலடர்ந்த ஒரு மதிய வேளையில்
கள்ளன் போலீஸ் ஆட்டத்தினூடே
சிலையின் மறைவில்
தாடிக்காரனோடு ஒரு பொம்பளையும் இருந்ததை பார்த்தப்பிறகு
பாட்டி சொன்ன
முறுக்கு மீசை , முழிக்கண்
அருவாளையும் தாண்டி
அய்யனார் சாமி வெறும்
உருவப்பொம்மை என்றேப்பட்டது .

7 comments:

Anonymous said...

Not true i hope.....

ஜெனோவா said...

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பரே !

அணையான் said...

I appreciate your style of writing, however please convey the positive and useful information to the society...This might hurt some community and religion.... After reading a couple of your articles ( தெருவோர பிள்ளையார் & நீர்த்துப்போனவைகள் ),I am giving this suggestion.

Manangalil alagudan
Kavipaadum kavignargal,
Mathangalin unarvinil-
Malyutham yetharku ?

Nanrigaludan,

Nanban...

ஜெனோவா said...

நண்பா ,
நான் யாரையும் புண்படுத்தும் நோக்கத்தில் இதை எழுதியிருக்க மாட்டேனென்பதை நீங்கள் நன்கு அறிவீர்கள் , இருப்பினும் யாரையாவது புண்படுத்தியிருந்தால் மன்னித்துக்கொள்ளுங்கள் !!

நிறைய அன்புடன்
ஜெனோவா

ஜெனோவா said...

நண்பா ,
நான் யாரையும் புண்படுத்தும் நோக்கத்தில் இதை எழுதியிருக்க மாட்டேனென்பதை நீங்கள் நன்கு அறிவீர்கள் , இருப்பினும் யாரையாவது புண்படுத்தியிருந்தால் மன்னித்துக்கொள்ளுங்கள் !!

நிறைய அன்புடன்
ஜெனோவா

Anonymous said...

Vijay TV Neeya Naana show la vantha incident vachu eluthinatha?

but thivam nindru thaan kollum...:)

- Aruna

இரசிகை said...

nice...:)