Thursday, November 19, 2009

கைமருந்து

அம்மா
எல்லா உபாதைகளுக்கும்
ஏதேனும் ஒரு கைமருந்து வைத்திருப்பாள் .

தின்னது செரிக்காமல்
வயிறு ஊதிக்கொண்டு அசமந்தமாக இருந்தால்
இஞ்சி போட்டு இடிச்சி
கைவசம் கசாயம் தயாராக இருக்கும் .

வேப்பிலை, மஞ்சளோடு
காட்டு நொச்சியையும் சேர்த்துப் போட்டு அவிச்சி
இரண்டு வேளை ஆவி பிடித்தால்
தலைவலியோ , பாரமோ காணாமல் போய்விடும் .

நெருஞ்சி முள் போல
உடம்பெல்லாம் சொறி எடுத்தால்
குப்பைமேனி கீரை அரைத்து
உடம்பெல்லாம் பூசி குளிக்கவைப்பாள்.

கத்திவெட்டுக்கு காபித்தூளும்
காலில் முள் தைத்தால் எருக்கலம்பாலும்
மணத்தக்காளி கீரையும் கூட
அம்மாவின் கண்டுபிடிப்புகள்தான் .

எல்லாத்துக்கும் ஒரு கைமருந்து வைத்திருந்தாலும்
இப்போவரை அம்மாவிடம் மருந்தில்லாத ஒரே உபாதை
தினந்தோறும் சாயங்காலம் ஏழு மணிக்கு வந்துபோகும்
அப்பாவின் குடிப்பழக்கம் மட்டும்தான் .


14 comments:

Priya said...

இத்தனை பிரச்சனைகளா உடம்புல...
நல்லவேளை அம்மாக்கு கைவைத்தியம் தெரிந்திருக்கு.

நல்லா இருக்கு.

முனைவர் இரா.குணசீலன் said...

நன்றாகவுள்ளது நண்பரே.........
வைத்தியத்தோடு வாழ்வியலும் எடுத்தியம்பும் உத்தி அழகு.

Marimuthu Murugan said...

நல்லா இருக்கு மச்சி
வழக்கம் போல
கலக்கிட்ட....

ஜெனோவா said...

வாங்க பிரியா , அதெப்படி எப்படி பந்து போட்டாலும் சிக்ஸர் சிக்ஸர்ஆ அடிக்கிறீங்க ;-))
உங்கள் பின்னூட்டத்தை ரசித்தேன் ( எப்படியெல்லாம் சொல்லி தப்பிக்கவேண்டிருக்குப்பா )

நன்றியும் வாழ்த்துக்களும் .

ஜெனோவா said...

மிக்க நன்றி முனைவர் அவர்களே , தொடர்வோம் !

ஜெனோவா said...

மிக்க நன்றி நண்பா .

வாழ்த்துக்கள்

Anonymous said...

வேப்பிலை, மஞ்சளோடு
காட்டு நொச்சியையும் சேர்த்துப் போட்டு அவிச்சி
இரண்டு வேளை ஆவி பிடித்தால்
தலைவலியோ , பாரமோ காணாமல் போய்விடும் .


Will be very helpful for you.....
Take it...

பா.ராஜாராம் said...

எவ்வளவு இயல்பு!எவ்வளவு கவிதை!

ஜெனோவா said...

அனானி நண்பர் , நன்றி !
பா.ரா அண்ணே , மிக்க நன்றிண்ணே ! ;-)

ஜெனோவா said...

அனானி நண்பர் , நன்றி !
பா.ரா அண்ணே , மிக்க நன்றிண்ணே ! ;-)

இரசிகை said...

nallaayirukku.........

தமிழ் said...

அருமை

ஜெனோவா said...

நன்றி இரசிகை !
நன்றி திகழ் !

சுந்தர்ஜி said...

அம்மாவின் அன்பு பூசிய கைவைத்தியம் போல் வேறு மருந்தில்லை.ஒருவேளை அப்பாவின் அம்மா மருந்து தந்தால் மாறக்கூடுமோ அப்பாவின் மாலை நேரப்பழக்கம்?அற்புதம் ஜெனோ.