Tuesday, June 22, 2010

வெள்ளி உருவிய தடம் !




உறக்கம் வராத
இராத்திரிகளில்
நட்சத்திரங்கள் ரசிப்பது
என் வழக்கம்

கொட்ட கொட்ட விழித்திருக்கும்
வெள்ளிகளுக்கு நடுவே
ஒரு வெள்ளி உருவி ஓடுகிறது
நான் பார்த்துக்கொண்டிருக்கிறேன்

உருவியோடும் வெள்ளிகளை
பார்த்துக்கொண்டிருப்பதால்
மறதி வாய்க்குமென்பதில்
இனி நம்பிக்கையில்லை

வெள்ளியொன்று உருவிச் செல்கிறது
பறவையொன்றும் படபடத்து பறக்கிறது
நான் பார்த்துக்கொண்டிருக்கிறேன்
சட்டென உன்நியாபகமும் வருகிறது !

12 comments:

rvelkannan said...

சிறப்பான கவிதை ஜெனோ. எனக்கு மிகவும் பிடித்துபோனது.
தேர்ந்த படத்தை தேர்வு செய்வதற்கு உங்களுக்கு தனிப்பட்ட வாழ்த்துகள்

Katz said...

கவிதை அருமை!

நேசமித்ரன் said...

தலைப்பு பேசுது நண்பா
கேட்டுட்டு இருக்குறேன்
:)

Marimuthu Murugan said...

மறதி வாய்க்குமென்பதில்
இனி நம்பிக்கையில்லை ...

சட்டென உன்நியாபகமும் வருகிறது ..

கலக்கல் ஜோ...

பா.ராஜாராம் said...

நல்லாருக்கு ஜெனோ டியர்.

Unknown said...

ம்ம்..அழகா இருக்கு
தலைப்பு மிகப் பிரமாதம்.

கமலேஷ் said...

வெள்ளிய உருவிய தடம்..
அருமையான வரிகள் நண்பரே..
கவிதையை படித்து விட்டு வானம் பார்க்க தோன்றுகிறது.
ரொம்ப நல்ல இருக்கு நண்பரே..

Anonymous said...

Congrats...

Good one...

-yel

Thamira said...

நல்ல ரசனையான காட்சி. எனக்குப்பிடித்திருந்தது. (அது ஞாபகம் என்றிருந்தால் நன்றாகயிருக்குமோ?)

Priya said...

பியூட்டிஃபுல் ஜோ!

அழகான‌ கவிதை... பொருத்தமான தலைப்பு... அதற்கேற்ற படம் என்று மிகவும் அருமையாக இருக்கு.

Gnani said...

atha paakum poadhu why my gnabagam

tt said...

wonderful jeno!