Thursday, August 26, 2010

பறந்தபடியே இருக்கட்டும் இறகு !

பறவையிடமிருந்து
பிரிந்த கதை தெரியாமல் இன்னும்
பறந்தபடியே இருக்கிறது
இந்த இறகு
தள்ளாடி ...தள்ளாடி
தரையை முட்டும் பொழுதில்
அவசரமாய் நான் செய்த
மூச்சுக்காற்றின் மீதேறி பறந்து
மறைந்த அது
உங்களிடமும் வரக்கூடும்
தயவுசெய்து
ரகசியம் காத்திருங்கள் - முடிந்தால்
ஒரு காற்றை செய்தனுப்புங்கள்
பறந்தபடியே இருக்கட்டும் இறகு !

12 comments:

Anonymous said...

அருமை ஜெனோ!
பிரிந்த இறகின் பயணம் தொடரட்டும் :)

Geetha said...

Nice one :)

Priya said...

//உங்களிடமும் வரக்கூடும்
தயவுசெய்து
ரகசியம் காத்திருங்கள்//... நிச்சயமா:)

ஆமாம் ஜோ, பறந்தபடியே இருக்கட்டும் இறகு!

rvelkannan said...

//பறந்தபடியே இருக்கட்டும் இறகு//
எழுதியபடியே இருங்கள் ஜெனோ ரொம்பவே நல்ல இருக்கு

"உழவன்" "Uzhavan" said...

திரும்பத் திரும்ப வாசித்துக்கொண்டிருக்கிறேன் ஜெனோ.. என்ன சொல்றதுனே தெரியல. அற்புதம்

Anitha said...

Wonderful da...

ப்ரியமுடன் பாலா said...

ரூம் போட்டு யோசிக்கிறது இது தானா?

ப்ப்ப்ரமாதம்ம்ம்ம்!!

Anonymous said...

Nice....

-yel.

கமலேஷ் said...

காற்றை செய்தனுப்புங்கள்

அல்லது

இதை போல ஒரு அழகான கவிதையை செய்தனுப்புங்கள்

பறந்தபடியே இருக்கும்
அந்த இறகு. - சரிதானே ஜெனோ.

vinthaimanithan said...

சரியா ஒரு மாசம் கழிச்சு பின்னூட்டம் போடுறேன்! ஏன் ஜெனோ அடிக்கடி எழுதலாமே? அவ்ளொ அடர்த்தியா இருக்கு கவிதைல்லாம்.... ரொம்பல்லாம் கேப் விடாதீங்க!

இரசிகை said...

remba remba pidichurukku...

raji said...

தங்களை வலைச்சரத்தில் குறிப்பிட்டுள்ளேன்.

http://blogintamil.blogspot.com/2011/10/blog-post_18.html